Thursday, December 16, 2010

கேள்வி: உண்மையான பக்தனாக மாறுவது எப்படி...?

குருஜி-யின் பதில்: "நான் ஒரு உண்மையான பக்தன்" என்று முதலில் நினைத்துகொள்ள வேண்டும். "நான் பக்தர்களில் முதன்மையானவன், என்னை போல் யாரும் இல்லை" என்ற உணர்வு வேண்டும். இன்னார் முதன்மையானவர்... எனக்கு இரண்டாமிடம் தான்... என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொருவரும் "நான் தான் பக்தர்களில் முதன்மையானவன்... என்னை போல் பக்தியில் சிறந்தவன் யாரும் இல்லை" என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருத்தல் அவசியம்...

நான் இரண்டாமிடத்தில் உள்ளேன், மூன்றாம் இடத்தில உள்ளேன்... பத்தாம் இடத்தில உள்ளேன் என்று நினைத்தால்... நீங்கள் நினைக்கின்ற அளவு ஞானத்தில் இருந்து விலகி இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்... இந்த பிரச்சனை பலருக்கும் உள்ளது... முதலில் வாழும் கலை அடிப்படை பயிற்சியை முடித்தபின் சில நாட்கள் கடை பிடித்து... பின் விட்டுவிடுவீர்கள்... மீண்டும் தொடர நினைக்கும்போது மிகவும் சிரமமாக இருக்கும். ஒரு முதுநிலை பயிற்சியில் கலந்துகொண்ட பின், மீண்டும் நம்மை இந்த ஞான பாதையில் இப்பயிற்சி அழைதுவருவதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment