Monday, December 20, 2010

கேள்வி: நீங்கள் மனதை பற்றி கூறும் பொழுது... மனம், சக்திவடிவானது - உடலையும்தாண்டி செல்லக்கூடியது என்று கூறினீர்கள்... விஞ்ஞான ரீதியாக பார்க்கும்பொழுது சக்திகளின் இணக்கம் ஆக்கபூர்வமாகவோ... அழிவுப்பூர்வமாகவோ இருக்கும். இப்படி இருக்கும்போது ஒருவருடைய மனது எப்படி அடுத்தவரின் மனதை பாதிக்கும் அல்லது... அடுத்தவரின் மனதில் பாதிப்பை உண்டாக்கும்...?

குருஜி-யின் பதில்: ஒருவருடைய மனதின் சக்தி கண்டிப்பாக அடுத்தவரிடம் ஒருவிதமான தாக்கத்தை உண்டாக்கும்... நம்முடைய உணர்வுகள் நம் எண்ணத்தைவிட வலிமையானது... இதை நாம் கண்கூடாக சிறு குழந்தைகளிடம் காணலாம்... சிறுவர்களில் ஒரு குழந்தை அழதுவங்கினால் மற்ற குழந்தைகளும் அழ ஆரம்பித்துவிடும்... அதைப்போல ஒரு குழந்தை விஷமம் செய்ய ஆரம்பித்தால் மற்ற குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடும்... இந்த அனுபவங்களை அந்தக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு மிக நன்றாக புரியும்.

இதைப்போலவே, ஒருவரை நோக்கி ஒருவர் காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொண்ட இடத்தில்... அல்லது ஒருவரை ஒருவர் திட்டிகொண்ட இடத்தில... அல்லது கோபமாக சண்டை போட்டு கொண்ட இடத்தில்... மற்ற நபர்கள் வந்தால் அந்த உணர்வுகளை அவர்கள் எளிதாக உணரமுடியும்... எந்த ஒரு காரணமும் இல்லாமல் முன்பு இருந்தவர்களின் உணர்வின் தாக்கத்தை இவர்களிடம் காண முடியும்... எந்த ஒரு காரணமும் இல்லாமல் கோபம்... அமைதியின்மை... மன அழுத்தம்... தொற்றிக்கொள்ளும்...!!!

ஆக உயர்வான உணர்வுகளுடன் ஒன்றிணைத்து இருக்கும் பொழுது... அந்த உயர்வான உணர்வுகள் மற்றவரிடமும் பரவி அவரையும் பற்றிக்கொள்ளும், ஆனால்... பார்க்கும்பொழுது நம்முடைய கோபமானது உயர்வான உணர்வைவிட வேகமாக மற்றவரிடம் பரவி... அவரையும் எளிதில் பற்றிக்கொள்ளும்...!!!

No comments:

Post a Comment