Thursday, December 30, 2010

கேள்வி: எப்பொழுதும் குற்றம், குறை கூறிக்கொண்டு... எதிர்மறையாக பேசிக்கொண்டிருப்பவர்களை எப்படி கையாள்வது...?

குருஜி-யின் பதில்: முதலில் "எப்பொழுதும்" என்னும் வார்த்தையை விட்டுவிடுங்கள்... எல்லவற்றையும் பொதுப்படையாக கூறுதல்... நீண்ட காலம் ஒன்றுக்கும் உதவாத விசயத்தை எடுத்துச்செல்வது நல்லதல்ல, இதைதான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்... 


           செல்லும் வழியில் நாம் எடுக்கவேண்டிய திருப்பத்தை தவறவிட்டுவிட்டால்... "ஓ...எப்பொழுதும்" நான் இப்படியே செய்கிறேன்... "எப்பொழுதும்" நான் திருப்பத்தை தவறவிடுகிறேன் என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்.... தினம்தோறும் நீங்கள்  அப்படித்தான் பாதையை தவற விடுகிறீர்களா...?  இல்லை, இவ்வாறுதான் எப்பொழுதும் நிகழ்கின்றதா...?

           இந்த சிறு எதிர்மறையான குணத்தை எதிர்கொள்ள உங்கள் நேர்மறையான... உன்னதமான... உயர்வான குணம்,  பலவீனமாக உள்ளதா...?

          இந்த சாதாரண எதிர்மறையான... குற்றம், குறை கூறும் குணத்தை உங்கள் உயர்வான நேர்மறையான குணத்தால் தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளதா...??

No comments:

Post a Comment