Monday, December 27, 2010

கேள்வி: நான் புத்த மதத்தை பின்பற்றுகிறேன்... புத்தர் பயிற்றுவித்தவைகளையும்... நீங்கள் பயிற்றுவித்தவைகளையும் தினமும் கடைபிடித்து, பயிற்சிகளை மேற்கொள்கிறேன்... மிகவும் நன்றாக இருக்கிறது... இவ்வாறு நான் இரு பயிற்சிகளை செய்வதால் ஏதாவது முரண்பாடு ஏற்படுமா...?

குருஜி-யின் பதில்: முரண்பாடுகள் மனதில் உண்டாகக்கூடியது, நீங்கள் இதை பற்றி குழப்பமடைய வேண்டாம். புத்தரின் போதனைக்கும் நம்முடைய போதனைக்கும் மிக்க வேறுபாடு இல்லை. நாம் இங்கு நான்கு விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.

1. மைத்ரி - சகோதரத்துவம் (அல்லது) நட்புரிமை பாராட்டுதல்.
2. கருணா - கருணை (அல்லது) அரவணைக்கும் தன்மை.
3. முதித்தா - மிகப்பெரிய அளவில் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைபவரை கண்டு மகிழ்ச்சி அடைதல்.
4. உபேக்ஷா - நல்வழிபடுதியவர் மீண்டும் தவறான பாதையில் செல்லும்போது அவரை வேறுபடுதிப்பராமல் இருப்பது.

ஆக சகோதரத்துவம் (அல்லது) நட்புரிமை மகிழ்ச்சியுடன் வரக்குடியது. ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது சகோதரத்துவம் (அல்லது) நட்புரிமை பாராட்ட முடியாது.
நல்வழிபடுதியவர் மீண்டும் தவறான பாதையில் செல்லும்போது அவரை வேறுபடுதிப்பராமல் இருக்கும் தன்மை அவரின் வாழ்வையே மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆயுதம். அவரை வேறுபடுதிப்பராமல் இருக்கும்போது அவர் கட்டாயமாக மாறிவிடுவார். இவற்றையே தான் புத்தரும், ஏசுநாதரும் அவரவருடைய வகையில் கூறியுள்ளனர்... 

அஸ்தி, பாத்தி, ப்ரீத்தி (Aasti, Bhati, Preeti) - இருப்பு, விழிப்புணர்வு, அன்பு. இவை அனைத்துமே எல்லோருக்கும் சொந்தமானது, இந்த ஞானத்தை உலகமயமாக்குவது இக்காலகட்டத்தின் நம் ஒவ்வொருவருடைய முக்கியத்தேவையாகும்.

No comments:

Post a Comment