Wednesday, January 21, 2009

வாய்மை - நல்ல உணர்வுகளின், நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு...

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்" - திருக்குறள்

உடலினது தூய்மை நீரினால் அமையும்... உள்ளத்தினுடைய தூய்மை வாய்மை என்னும் நற்பண்பினால் அமையும்...

வாய்மை என்பது வெறும் செயல் மட்டுமல்ல... நல்ல உணர்வுகளின், நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு... உணர்வுகளும், எண்ணங்களும் நமது உள்ளத்திலிருந்து தான் வெளிப்படுகின்றது... உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால், அதன் பிரதிபலிப்பு நமது உணர்வுகளிலும், எண்ணங்களிலும் காண முடியும்...

உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு மிகச்சிறந்த வழி தான் 'தியானம்'... தியானத்தின் மூலம் வாய்மை எனும் நல்ல பண்பினை அடைய முடியும்.

Wednesday, January 14, 2009

மூச்சின் ரகசியம் உங்களுக்குத்தெரியுமா...?

நம் உடலில் இருந்து வெளியேற கூடிய (80-90) சதவிகித நச்சு கழிவுகள் நம் மூச்சின் மூலம் வெளியேறுகின்றது...(மல ஜலம் மூலம் வெளியேறக்கூடிய நச்சு கழிவுகள் வெறும் 10-20 சதவிகிதம் மட்டுமே..)

சராசரி மனிதர்கள் தம் நுரையீரலை முழுமையாக உபயோகிப்பதில்லை... சராசரி மனிதர்கள் தம் நுரையீரலின் கொள் அளவில் 30 சதவிகிதமே உபயோகிக்கிறார்கள்... சுவாசத்தை சரிபடுத்துவத்தின் மூலம் நாம் நம் நுரையீரலின் கொள் அளவை அதிகப்படுத்தமுடியும்...நுரையீரலின் கொள் அளவை அதிகப்படுதுவத்தின் மூலம் நாம் நம் உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடியும்...


வாழும் கலை பயிற்சியில் பல நுணுக்கமான மூச்சு பயிற்சிகள் கற்றுகொடுக்கப்படுகின்றது... பயிற்சியில் சேர்ந்து பயன் பெறுங்கள்...

சென்ற வார சத்சங்கத்தில்...

சென்ற வார சத்சங்கத்தில் குருஜியிடம் சிலர் கேள்வி கேட்டனர்... குருஜியின் பதில்களில் சிலவற்றின் தமிழாக்கம்...


(இந்த வாரம் ஆசிரியர் பயிற்சி நிறைவு பெற்றதால் ஆசிரியர் சம்பந்தமான கேள்வி ஒன்றை ஒருவர் கேட்டார்)


கேள்வி : ஒரு நல்ல வாழும் கலை ஆசிரியரின் அடையாளங்கள் என்ன...?
குருஜியின் பதில் : ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்கள்.... (Humility) பணிவு, (Integrity) முழுமை/நேர்மை/வாய்மை, (Compassion)அரவணைக்கும் தன்மை... இம்மூன்று குணங்கள் இருத்தல் அவசியம்


இந்த குணங்கள் ஆசிரியருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு மனிதனிடமும் இருத்தல் அவசியம்... இந்த குணங்கள் எல்ல மனிதர்களிடம் மறைந்துள்ள இயல்பான குணங்கள்... அதை அனைவருக்கும் உணரவைத்தல் அவசியம்... இப்பொழுதுள்ள காலகட்டத்தில் நாம் இதை ஒரு சவாலாக ஏற்று அனைத்து மக்களிடமும் உணர்த்த நாம் பாடுபட வேண்டும்.


கேள்வி : குருஜி, ஆன்மீகத்திற்கும்... செழிப்பான வாழ்வு... இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது..? (I am in crossroads between Spirituality and Prosperity)
குருஜியின் பதில் : ஆன்மீகம் செழிப்பான வாழ்விற்கு எதிரானது அல்ல... அதேபோல் செழிப்பான வாழ்வு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல... ஆன்மீக உணர்வு இல்லாத செழிப்பான வாழ்வு நம்மை தாழ்வு நிலைக்கு தள்ளிவிடும்...


பல மனிதர்கள், நிறுவனங்கள் நன்னெறிகள் இல்லாமல் செழிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கியவர்கள் தாழ்வு நிலையை அடைந்ததை கண்கூடாக நாம் கண்டுள்ளோம்... ஆக ஆன்மீகம் கலந்த செழிப்பான வாழ்வு மேன்மையுடையது. செழிப்பு என்பது பொன் பொருள் மட்டுமல்ல... நன்னெறிகளும் தான்...

Monday, January 5, 2009

இன்றைய கல்வி முறை...

நம் நாடு ஆன்மீகத்தில் சிறந்தது என்று கூற கேட்டிருக்கின்றோம்... ஆன்மிகம் என்றால் கோவிலுக்கு செல்வது... விரதம் இருப்பது... நல்ல பக்திப்பாடல்கள் கேட்பது என்ற வெளிப்படையான செயல்களில் தான் காண முடிகிறது. இவை மட்டும் தானா ஆன்மிகம்...?

இதோ நம் நாட்டையும் நாட்டில்லுள்ள மக்களையும் மக்களின் தன்மையையும் பற்றி ஒரு ஆங்கிலேயனின் அறிக்கை...



"நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்... அங்கு ஒரு பிச்சைக்கரானையோ, திருடனையோ நான் பார்க்க முடியவில்லை, அபரிமிதாமான செல்வத்தையும், மிக உயர்ந்த கொள்கைகளுடைய மக்களை காண முடிந்தது. இப்படிப்பட்ட மக்களை உடைய இந்தியாவை நாம் கவரவேண்டுமென்றால், இந்நாட்டின் முதுகெலும்பாகிய ஆன்மீகத்தையும், உயரிய பண்பாட்டையும் உடைத்தெறிய வேண்டும், மேலும் அவர்களுடைய பழமையான பாரம்பரியமிக்க கல்விமுறையை மாற்றி... ஆங்கிலமும், அந்நிய தேசமும் உயர்ந்தது, சிறந்தது என்று மக்களை நம்பும்படியாக செய்வதின் மூலம் நாம் அவர்களை நாம் விரும்பும் வண்ணம் அவர்களை ஆட்டுவிக்க முடியும்." இவ்வாறு இந்த அறிக்கை ஆங்கில அரசிடம் சமர்பிக்கபட்டது, சமர்பித்தவர் "லார்ட் மெக்காலே"... இவர் வடிவமைத்த கல்வி முறையை தான் நாமும் நம் மக்களும் கற்றுகொண்டிருக்கின்றோம்...

இதனால் பாதிக்கப்பட்டது நாமும் நம் நாட்டு மக்களும் தான்... இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நம் நாட்டின் பண்பாட்டை நம் சமூகத்திலிருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்காததுதான், ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம், இந்த அற்புதாமான கல்விதனை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும்.

"பாருக்குள்ளே நல்ல நாடு... எங்கள் பாரத நாடு..." என்னும் பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப, நம் நாடு சிறந்து விளங்க வேண்டும்... அதற்காக நாம் தினமும் சில மணி நேரங்கள் செலவிட வேண்டும்...

பழைமையான கல்வி முறையில் உடல் ஆரோக்கியம் இருந்தது, கல்வியினால் மனம் பண்பட்டது, உயர்ந்த சிந்தனை இருந்தது... அதை நாம் மறந்துவிட்டோம். இந்த அற்புதமான கல்வி முறையை நாம் வாழ்வில் கடைபிடிக்க அற்புதமான வழியை நமக்காக (அந்தந்த வயதினற்கு ஏற்றபடி கல்வி முறையை) வடிவமைத்துள்ளார் பூஜ்ய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். நம் நாட்டின் ஆன்மீகத்தையும், பண்பாடையும் மீண்டும் மக்களின் மனதில் உயிர்தழ செய்வதே நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
சமீபத்தில் நான் ஒரு கல்லூரி மாணவனின் வாகனத்தில் கண்ட வாசகம் ...
"Born Intelligent, Ruined by Education"
(புத்திசாலியாய் பிறந்தேன், கல்வி அதை பாழக்கியது...)