Monday, December 27, 2010

கேள்வி: வியாபாரத்தில் நாம் பெற்றுக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.... ஆனால் ஆன்மீகத்தில் கொடுப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம்... எப்படி ஒருவர் இந்த இரண்டிலும்... குற்ற உணர்வில்லாமல் சமாளிப்பது...?

குருஜி-யின் பதில்: ஆன்மீகத்திலும் பெற்றுக்கொள்ளும் தன்மை உள்ளது... ஆன்மீகத்தில் மகிழ்ச்சியை பெற்றுக்கொள்கிறோம்... மற்றவர் மகிழ்வதை பார்த்து அந்த மகிழ்ச்சியை நாமும் பெற்றுக்கொள்கிறோம்... ஆக குற்ற உணர்வுக்கு இடம் கொடுக்க வேண்டியதில்லை.

வியாபாரம் புத்தி சம்பந்தப்பட்டது... (அதாவது தலைக்கு வேலை...), கொடுப்பது குறைவு... பெற்றுக்கொள்வது அதிகம்... ஆனால் ஆன்மிகம் மனம் சம்பந்தப்பட்டது (இதயத்துக்கு வேலை...) கொடுப்பது அதிகம்... பெற்றுக்கொள்வது குறைவு...!!!  ஆகையால் ஆன்மீகத்தை வியாபாரம் போலவும்... வியாபாரத்தை ஆன்மிகம் போலவும் செய்தால் கண்டிபாக பாதிப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment