குருஜி-யின் பதில்: முதல் கேள்வியை நீங்களே வைத்துகொள்வது அவசியம், யாமும் அதையே விரும்புகின்றோம். நல்ல கேள்விகளை யாம் உங்களிடம் இருந்து பிரித்து-எடுத்துக்கொள்வது கிடையாது, உங்களிடமே விட்டுவிடுகிறோம். இம்மாதிரியான கேள்விகள் உங்களை ஆழமாக சிந்திக்கசெய்யும் ஆற்றல் உடையது... உங்களுள், உங்களை, மிக ஆழமாக அழைத்துச்செல்லும் ஆற்றலை உடையது. இந்த கேள்வியை சுற்றியே நன்றாக யோசனை செய்யுங்கள்... ம்ம்ம்...!!!
இரண்டாவதாக, "எப்படி கெட்ட கனவுகளில் இருந்து வெளிவருவது...?" என்று கேட்டீர்கள். இதற்கான பதில் "விழித்துக்கொள்வது"-தான்...!!!.
விழித்துக்கொள்ள... மூச்சுபயிற்சி-கள், மற்றும் தியானம் செய்வது அவசியம். அப்படி செய்தால் கெட்ட கனவுகளிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment