Friday, December 17, 2010

கேள்வி : ஓம் என்பதன் அர்த்தம் என்ன?

குருஜி-யின் பதில்: படைப்பின் ஒரு அற்புதமான ஒலி "ஓம்"... இதை காலத்தின் ஒலி என்று குறிப்பிடலாம்... காலம் தோன்றும் போதே இந்த ஒலியும் இருந்திருக்கின்றது. இந்த ஒலி "ஆ..." "ஊ..." "ம்..." ஆகிய சப்தங்களை உள்ளடக்கியது...

ஒரு மலை உச்சியில் சென்று அங்கு ஏற்படும் சப்தத்தை உன்னிப்பாக கவனித்தால் "ஓம்" என்ற ஒலி-யை கேட்கமுடியும்... அதே போல கடல் அலைகளால் ஏற்படும் சப்தத்தை கேட்டாலும் "ஓம்" என்ற ஒலி ஏற்படுவதை கேட்க முடியும்.

ஓம் என்ற ஒலி-யை உச்சரிப்பது மூன்று நிலை பிரணாயாமா செய்வதற்கு ஒப்பாகும்...
"ஆ..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் வயிற்று பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்... "ஊ..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் மார்பு பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்...
"ம்..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் உடம்பின் மேல் பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்.

No comments:

Post a Comment