Thursday, December 30, 2010

கேள்வி: ஒரு கூற்று உள்ளது... நாராயணனை வணங்கி வந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) தானாக கிட்டும்... என்று கூறுவர்... ஏன், லக்ஷ்மியை வணங்க கூடாதோ...?

குருஜி-யின் பதில்: சில பேர் தவறாகபுரிந்துள்ளனர்... இந்த கூற்றை யாம் மாற்றி கூறுகிறோம்... யாம் லக்ஷ்மியை வணங்க சொல்வோம்... இருவரையும் வணங்காமல் மேலோட்டமாக சடங்கு சம்பிரதாயத்திற்காக... பாசாங்கு செய்தால்... ஒரு பயனும் கிட்டாது, ஒன்றும் நடக்காது. இங்கு யாம் கூறுவது என்னவென்றால்...  "உபாசனம்" செய்யுங்கள் (மெய்யுருகி வணங்குங்கள்). அப்படி வணங்கும்போது... உங்களால் "கறை-படிந்த மனதுடனோ" அல்லது "நேர்மையில்லாமலோ" இருக்கமுடியுமா?

          சமஸ்க்ருதத்தில், "எல்லாமே செல்வமாக" நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்... செல்வம் என்பது பொன் பொருள் காசு பணம் மட்டுமல்ல. "ஆரோக்கியம்" ஒரு வகையான செல்வம்... "வெற்றி" ஒரு வகையான செல்வம்... "தைரியம்" ஒரு வகையான செல்வம்... "அஷ்ட லக்ஷ்மி"-யை வணங்கி வந்தால் பலன் கிட்டும். 

         பொன் பொருள் சேர்பதற்காக மட்டும் நாம் லக்ஷ்மியின் பின்னல் ஓடுகிறோம்... கொஞ்சம் யோசியுங்கள்... மனதார வணங்குங்கள், பிரார்த்தனை செய்யுங்கள்... லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) தானாக கிட்டும். 

        முட்டாள் தனத்துடன் செயல்பட்டால்... லக்ஷ்மி கடாக்ஷம் (செல்வ-விருத்தி) உங்களை வந்தடையுமா....?

No comments:

Post a Comment