Friday, December 17, 2010

கேள்வி : தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது... மிகவும் அருமையாக இருக்கிறது, ஆனால் அன்றாட வாழ்கையில் பல காரியங்களில் இடுபட வேண்டியுள்ளது... அன்றாட வாழ்கையை கோபமில்லாமலும்... பரபரப்பு இல்லாமலும் அமைதியான மனதோடு இயல்பாக வாழ்வது எப்படி?

குருஜி-யின் பதில்: நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள தினமும் காலையில் குளிக்கின்றோம்... அதன் பின் நம் அன்றாட காரியங்களை கவனிக்கின்றோம்... காலை முதல் குளித்துக்கொண்டே இருப்பது என்ற அவசியம் இல்லை... அதுபோல தியானம் செய்து மனம் அமைதியடைந்தபின் அன்றாட காரியங்களை கவனிக்கலாம். மனதை தொந்தரவு இல்லாமல் வைத்துக்கொள்வதென்பது சுலபமான காரியமில்லை... தொடர்ந்து தினமும் சில மணிநேரம் பயிற்சி மேற்கொண்டால்... எளிமையாக மன அமைதி பெறலாம்.

No comments:

Post a Comment