Wednesday, December 15, 2010

கேள்வி: ஆன்மீக பாதையில் முன்னேறி இருக்கிறோமா இல்லையா என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

குருஜி அவர்களின் பதில்: எப்பொழுதும் சந்தேகம் நல்ல விசயங்களின் மேல் தான் வரும்... உதாரணமாக - நீங்கள் மற்றவர்களின் அன்பின் மேல் சந்தேகம் கொள்வீர்கள், அனால் அவரின் கோபத்தின் மேல் சந்தேகமே படமாடீர்கள்... ஆக, நீங்கள் உங்கள் ஆன்மீக அனுபவத்தின் மேல் சந்தேகம் கொண்டால் அந்த அனுபவம் நிச்சயமாக "ஒரு நல்ல அனுபவமாகத்தான் இருக்க முடியும்"...!!!

ஆன்மீக பாதையில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை நாமே அறிந்துகொள்ள கீழே உள்ளவைகளால் அறிய முடியும்:

# நமக்குள் கருணை அல்லது அரவணைக்கும் தன்மை வளர்ந்திருக்கிறதா இல்லையா...,

# நம்மை சுற்றி நடக்கும் செயல்கள்... அதில் இருந்து விடுபடும் தன்மை...,

# நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், நம்மை பாதிக்கும் செயல்கள்... அதில் இருந்து விடுபட்டு எவ்வளவு வேகமாக நம் இயல்பான நிலைக்கு திரும்பும் மனோபாவம்...

இவற்றை எல்லாம் வைத்து நாம் ஆன்மீக பாதையில் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை நாமே அறிந்துகொள்ள முடியும்...!!!

எப்பொழுதும் நம்முடைய முன்னேற்றத்தை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கதேவை இல்லை... ஒரே நேரத்தில் மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்க முடியாது...!!!

2 comments:

  1. I have done part-I with you in Dharmapuri about 5 years back. It was an amazing experience that time. I'm very glad to see you start writing again in this blog. I wish you'd continue to write something every week, if not every hour. ;) Jai guru dev.

    ReplyDelete
  2. Thanks Mr. Pothi... This will continue... I am utilizing ~1hr/day for translation.

    ReplyDelete