Wednesday, December 29, 2010

கேள்வி: (குழந்தை வளர்ப்பில்) பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்?

குருஜி-யின் பதில்: பெற்றோராய் இருக்கும்போது உங்களுடைய அறிவு (அல்லது) தெரிந்துகொள்ளும் தன்மை, பல பரிமாணங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும். பலவற்றை மிக வேகமாக, மிக துல்லியமாக புரிந்துகொள்வீர்கள். உங்கள் கவனம் மிகவும் கூர்மையாக இருக்கும், அதிலேயே மூழ்கிவிடுவீர்கள். ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாவலன் போல செயல்படுவீர்கள். உங்களை சுற்றி, குழந்தைகளை சுற்றி, நடைபெறும் நிகழ்வுகளிலேயே உங்கள் கவலையெல்லாம் சூழ்ந்திருக்கும். நீங்கள் அமைதியாய் இருக்கும்பொழுது, அந்த அமைதியை குழந்தைகளும் பற்றிக்கொள்வார்கள்.

       சில சமயம் குழந்தைகளும் முதிர்ந்த பெரியவர்கள் போல பேசுவதையும் காணமுடியும்... பத்து வயது குழந்தைகள் கிளிகள் போல இருப்பார்கள்... சூழ்நிலையில் என்ன நிகழ்கிறதோ அதையே மீண்டும் திரும்பக்கூறும் தன்மை உடையவராய் இருப்பார்கள். ஆகையால், பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு உதவாத செயல்கள், காரியங்கள், போன்றவற்றை அவர்கள் முன்னால் செய்வதை தவிர்க்கவேண்டும். ஆன்மிகம் பற்றிய உணர்வை அவர்களிடத்தில், பக்குவமாக, சில கதைகள் மூலம், விளையாட்டுக்கள் மூலம் உணரவைக்கவேண்டும். பிறர்க்கு கொடுத்து உதவும் தன்மையை அவர்களிடத்தில் வளர்ப்பது பெற்றோர்களாகிய உங்களின் தலையாய கடமையாகும்.

No comments:

Post a Comment