Wednesday, December 15, 2010

கேள்வி: எல்லாமே மாறிக்கொண்டு இருக்கிறதென்றால், தன் நிலை மாறாமல்... நிலையாக இருப்பவை... எவை... என்ன?

குருஜி-யின் பதில்: "எல்லாமே நிலையற்றவை"... இது தான் நாம் உணர்ந்த உண்மை... நிலையற்றவைகளை கண்டுகொள்வது மிக எளிமையானது. இந்த உண்மை மிகதெளிவாக புரியும்போது, மற்றொன்றையும் புரிவது அவசியம்... இந்த நிலையற்றவைகளை நடுநிலையாய் சுட்டி காட்ட ஒரு ஆதாரம் தேவை. ஒரு நடுநிலையான மாறாத ஆதாரம் இருந்தால் மட்டுமே மாறிகொண்டிருப்பவைகளை கண்டுணர முடியும். எல்லாமே மாறிகொண்டிருக்கிறது என்றால் அதை உணர்வதற்கு மாறாத ஒன்றின் உதவி இல்லாமல் அதை உணர முடியாது. எல்லாமே மாறுகின்றது என்பதை உணரும்போது, அப்படியே நம்முள் உள்நோக்கி பயணித்து பார்த்தோமேயானால் ஏதோ ஒன்று மிகவும் வேறுபட்டு... தனித்தன்மையாய்... அழகாய் மாறாமல் இருப்பது புரியும்... இது ஒரு மறைமுகமும் இல்லாத நேர்முகமும் இல்லாத ஒரு வித்யாசமான அனுபவம்... இதை தான் அத்வைத தத்துவத்தை உலகிற்கு வழங்கிய ஆதி சங்கரர் "அப்ரகோஷ-அநுபூதி" என்று குறிபிட்டுள்ளார். "ப்ரகோஷ" என்றால் "நேரடியான" (direct), "அநுபூதி" என்றால் "மறைமுகமான" (Indirect)... இந்த அனுபவம் நேரடியாகவும்... மறைமுகமாகவும்... அனுபவிக்க முடியாத ஒன்று...!!! இந்த ஷூட்சுமத்தை தவிர்க்கவோ.... தக்கவைத்துகொள்ளவோ... முடியாது...!!! இந்த அனுபவத்தை யாராலும் தவிர்க்கவும் முடியாது, தக்கவைத்துகொள்ளவும் முடியாது... இதுவே உண்மையான நுண்மையான புதிர், இது தான் நம் வாழ்க்கை.

வாழ்கையில் "நான் தூங்கியதே இல்லை" அல்லது "இது தான் தூக்கம்" என்று ஒருவராலும் சொல்ல இயலாது... இது நமக்கு நாமே தெரியாமல் அனுபவித்துகொண்டிருக்கும் அனுபவத்தின் ஒரு பகுதி. நம்மை... தூங்க வைக்கும்... தூக்கத்தில் இருக்கும்... தூக்கத்தில் இருந்து எழவைக்க கூடிய ஒன்று தான் நம்முடைய "மெய்/சுயம்/ஆன்மா" (Self). இது இன்னும் ஒரு பெரிய புதிர்... இது இல்லாமல் நாம் இருப்பது சாத்தியமற்றது. இது இல்லாமல் இருக்க கூடியது... ஆனால் உணரவோ... தெரிந்து கொள்ள முடியாத ஒன்று...

தூய ஞானத்தின் வாயிலாகவும்... அருளின் மூலமாகவும் அறிய முடியும்... இதை "மெய் ஞானம்" என்றழைப்பர் (Self Knowlege).

No comments:

Post a Comment