Monday, December 20, 2010

கேள்வி: நான் கடவுளை நம்பவேண்டும். அப்படி நான் நம்புவதற்கு அத்தாச்சியாக ஏதாவது அதிசயங்கள் நிகழவேண்டும்... அப்படி ஏதேனும் உள்ளதா அல்லது எனக்காக நடைபெறுமா...?

குருஜி-யின் பதில்: உன்னை சுற்றி இருப்பவைககளை பார்... எல்லாமே அதிசயம்தான்.. ஒரு சிறிய விதை, முளைவிட்டு ஒரு பெரும் மரமாக வளர்கின்றது... இது ஒரு அதிசயமாக தெரியவில்லையா...?

ஒரு முறை யாம் சென்னை சென்றிருந்தபோது ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தனர்... அச்சிறுவன் பிறந்தது முதல் செவி கேளாதவன் என்று கூறினர்... யாம் அவனது தலையில் தட்டிக்கொடுதோம்... அச்சிறுவன் தன் வாய்விட்டு ஓசைகள் செய்ய ஆரம்பித்துவிட்டான்...!!! இந்தவிசயம் கேள்விப்பட்டு, மறுநாள் இதேபோல் பாதிக்கப்பட்ட இருபது சிறுவர்களை அழைத்துவந்தனர்...!!!

அதிசயங்கள் இப்பொழுது இயல்பாக உடனடியாக நடக்கின்றது. இது இப்படிதான் நடக்கும்... நடக்கவேண்டும் என்று உறுதியாக சொல்ல இயலாது... நம்மிடம் நல்ல விஷயங்கள் ஆங்காங்கே அமையப்பெற்றால் அதிசயமானது தானாக நடக்கும்.

No comments:

Post a Comment