Thursday, December 16, 2010

கேள்வி: பெண்களை பார்த்தால் என்னுள் காம உணர்வுகள் அதிகரிக்கின்றன... புனிதமான இடங்களில் கூட, தங்களின் முன்னிலையிலும் கூட... இதிலிருந்து விடுபடுவது எப்படி?

குருஜி-யின் பதில்: அது தானாக மறைந்துவிடும். உங்களுக்கு போதுமான வேலை இல்லாத பொழுது இம்மாதிரியான எண்ணங்களில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பதிவுகளின் காரணத்தினாலும்... அல்லது முற்ப்பிறவியில் ஏற்பட்ட பதிவுகளின் காரணத்தினாலும் இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு தீ பிடித்து எரியும் வீட்டிற்க்குள் நீங்கள் சிக்கி விட்டீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்... அப்பொழுது... நீங்கள் தப்பிப்பதற்கு முயல்வீர்களா... இல்லை நீங்கள் விரும்பும் பெண்ணை நினைத்துபார்த்து ரசித்துக்கொண்டிருப்பீர்களா...? உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையாலும்... உள்ளே இருந்தால் பாதிப்பு உண்டாகும் என்ற பயத்தினால் தப்பிபதற்கு முயல்வீர்கள்... ஆக பயமும், ஆசையும் ஒரு வகையில் நல்லதே... பயத்தையும், ஆசையையும் புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தி நம்மிடம் உள்ள தீய பழக்கங்களில் இருந்து விடுபடவேண்டும்...

உதாரணமாக உங்களுக்கு மது பழக்கம் அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதென்றால்... இவற்றை உபயோகித்தால் பெரிய இழப்பு (பண வகையிலோ, குண வகையிலோ, ஆரோக்ய வகையிலோ) நேரிடும் என உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளலாம்.

பயமும் மிக முக்கியமானது... பயம் இல்லாவிட்டால் மக்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் எதைவேண்டுமானாலும் செய்ய துவங்கிவிடுவார்கள்... போக்குவரத்து சாலையில் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் செல்ல துவங்கிவிடுவார்கள்... ஒரு ஒழுக்க கட்டுபாட்டை கடைபிடிக்க பயம் அவசியம்.

No comments:

Post a Comment