Saturday, August 1, 2009

நிங்களும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...?

அந்த குழந்தை பிறந்த பொழுது, அந்த குழந்தையின் தந்தை காலமாகி மூன்று மாதமாகி இருந்தது... குறை மாதத்தில் பிறந்ததால் உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சி குன்றி காணப்பட்டான்... நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் குவளையில் அடங்கிவிடும் அளவே அந்த குழந்தை இருந்தான்...

சிறு வயதில் படிப்பு வராததின் காரணமாக அவனது தாய், அவனுடைய பதினைந்தாவது வயதில் விவசாயம் பார்க்க அனுப்பி வைத்தாள்... வேண்டா வெறுப்பாக அவன் அந்த வேலையில் ஈடுபட்டான்... ஒரு நாள் அவனுடைய மூத்த ஆசிரியர் அவனை மீண்டும் கல்வி கற்க வற்புறுத்தி, கல்வியை தொடரசெய்தார். அவனுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு பெண்ணை காதலித்தான், படிப்பிலும் ஆர்வமும் மிகுந்தது... படிப்பில் கவனம் செலுத்தியவுடன் காதல் கசிந்து அந்த பெண் வேறு ஒருவருடன் மணமுடிக்கபட்டாள்... அதற்கு பின் அவன் திருமணமே செய்துகொள்ளவில்லை...

அதிருஷ்டமே இல்லாமல், வாழ்கை வாழ்வதற்கே தடுமாற்றத்துடன், படிப்பில் முழுமை பெறாமல் திண்டாடிய அந்த சிறுவன் என்ன சாதித்திருக்க முடியும்...

பின்னாளில்...

# உலகின் புவியீர்ப்பு (Universal Gravity) சக்திதனை உலகிற்கு விவரித்தார் ...

# மூன்று இயக்க விதிகளை (Three Laws of Motion) படைத்தார் ...

# பிரதிபலிக்கும் தொலை நோக்காடியை (Reflecting Telescope) கண்டுபிடித்தார் ...

# கணித சாஸ்த்ரதிற்கு பல்வேறு பங்களிப்பு அளித்துள்ளார்...

அவர் வேறு யாருமல்ல...

சர். ஐசாக் நியூட்டன் அவர்கள்...

எதிர் மறையான சூழ்நிலையை கண்டு அவர் ஒதுங்கிவிடவில்லை... எல்லா சூழ்நிலைகளையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு கடந்து சென்றார்...!!!

நாமும் வாழ்வில் எதிர் மறையான சூழ்நிலையை இன்முகத்துடன் எதிர்கொண்டு கடந்து சென்றால் வாழ்வில் நாமும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...!!!