(சுதர்சனகிரியா என்பது வாழும்கலை பயிற்சியில் கற்றுத்தரப்படும் ஒரு உன்னதமான மூச்சு பயிற்சி.)
இந்த கேள்வி என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் தோன்றக்கூடிய கேள்வி...சமீபத்தில் ஒரு மூத்த வாழும் கலை ஆசிரியர் நம் மையத்திற்கு (Santa Clara!) வருகை புரிந்தார். அவரிடம் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் பொழுது... விளையாட்டாக இந்த கேள்வியை கேட்டேன்...??
குருஜி-யின் யோகா சூத்திர விளக்கத்தை அவர் எம்மிடம் விவரித்தார்...
மூச்சு காற்றில் - பிராண சக்தி இருப்பது எல்லாரும் அறிந்த விஷயம். ஆனால் அது எப்படி செயல்படுகிறது எனபது ஒரு ஆச்சர்யமான விஷயம்.
பிராண சக்தியை ஐந்து முக்கிய பிரிவுகளாகவும் , ஐந்து துணை பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றது...
ஐந்து முக்கிய பிரிவு
---------------------------------------------------
௧.
பிராணா - நம் உள்ளே செல்ல கூடிய காற்று. உள்சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து ஒவ்வொரு அணுவிற்கும் சென்று அடையக்கூடியது. நம் மூச்சு காற்றாகவும், இதய துடிப்பாகவும் நம்மிடம் உணரப்படுகின்றது.
௨. அபானா - உடலில் இருந்து வெளிவரகூடியது. நம் உடலில் உள்ள நச்சு கழிவை வெளியேற்றகூடியது.
௩. உதானா - நம் உணர்வுகளுடன் சம்பந்தபட்டது. உணர்வுகளின் பொழுது இந்த சக்தி வெளிபடுகின்றது. இது நம் மார்பு/இதய பகுதிகளில் ஏற்படுவதை உணரலாம்.
௪. சமானா - ஜீரணத்திற்கும், ஒவ்வொரு அணுவை புதுப்பிபதற்கும் இந்த சக்தி உதவுகிறது. ஒவ்வொரு மனிதரிடம் ஒளிவட்டம்/ஆரா உண்டாவதற்கு இந்த சக்தி உதவுகிறது. தினமும் தியானம் பயில்பவரிடம் இந்த சக்தி நன்கு செல்யல்படும்.
௫. வியானா - இந்த சக்தி உடல் தசைகள் நன்கு செயல்பட உதவுகிறது. எலும்புகளின் பிணைப்பு இந்த சக்தியின் மூலம் ஏற்படுகின்றது.
ஐந்து துணை பிரிவு
--------------------------------------------------
௧. நாகா - சில சமயங்களில் நம் வயிற்றில் அங்கும் இங்கும் சப்தம் உண்டாக்கி ஏப்பமாக வெளிவரக்கூடிய காற்று
௨. கூர்மா - சமஸ்க்ரிதத்தில் 'ஆமை'-யை கூர்மா என்று அழைப்பர். இந்த சக்தி நிதானமாக வரக்கூடியது. குறிப்பாக நம் முகத்தில் இதை உணரலாம். கண் துடிப்பது. உதடுகள் துடிப்பது, கன்னங்கள் துடிப்பது, நெற்றி துடிப்பது, தசைகள் துடிப்பது... இவைகளுக்கு காரணமே இந்த கூர்ம சக்தி வெளிபடுவது. இந்த சக்தியில் குறைபாடு ஏற்படுவதினால் முடக்கு வாதம்/வாத நோய் ஏற்படுகிறது.
௩. தேவ தத்தா - கொட்டாவி விடல். நம் உடல் தளர்வடயும்போது இது வெளிப்படும்.
௪. க்ரிகலா - தும்மல் ஏற்படுவது.
௫. தனஞ்சயா - இதய வால்வுகள் செல்யல்படுவதற்கு மிக முக்கியமாக உதவக்கூடியது. இதன் குறைபாடு - மாரடைப்பை ஏற்படுத்தும்.
பிரணாயாமா, பாஸ்திரிக்கா, ஓம் உச்சாடனம் செய்யும் பொழுது... நம் உடல் பக்குவப்படுகின்றது...
சுதர்சன கிரியா செய்யும் பொழுது மட்டுமே மேற்கூறிய அணைத்து சக்திகளும் - நன்முறையில் தூண்டப்பட்டு சமன்படுத்தப்படுகின்றது.
சுதர்சன கிரியா செய்யும் பொழுது சில சமயம் ஏப்பம், உடல் பகுதிகள் துடிப்பது, கொட்டாவி, தும்மல், உடல் தசைகள் இறுகி தளர்வாவது, அழுகை-சிரிப்பு-சோக உணர்வுகள் வெளிபடுவது, பிரகாசமான உணர்வு... போன்ற அனுபவங்கள் அனைத்துமே மேற் கூறிய சக்திகளின் வெளிப்பாடுகளாகும்.
இது எனக்கு கிடைத்த மிக மிக உபயோகமான விஷயம். இதுவே "சுதர்சன கிரியா-வை ஏன் நான் தினமும் செய்ய வேண்டும்...???" என்பதற்கான உன்னதமான பதில்..!!!
குறிப்பு:
என்ன நண்பர்களே.... இனி தினமும் பயிற்சி செய்வோமா...???
அப்படி செய்யும் பொழுது... இந்த சக்தி செயல்படுகின்றது அந்த சக்தி செயல்படுகிறது என்று ஆராய்ச்சி செய்யாமல் பயிற்சியை மட்டும் செய்யலாமே :) :)...!!!
ஆராயாமல்... இந்த அற்புதமான விஷயத்தை அனுபவிப்போம்!!!
Great Knowledge.
ReplyDeleteJai Gurudev
This elucidates the benefits of practising Sudarsana Kriya daily. K.Raveenthiran
ReplyDeleteYes...
ReplyDelete