Friday, April 15, 2011

"குரு பூர்ணிமா"-வின் தத்துவம் என்ன?

குருஜி: ஒரு ஆச்சார்யா(ஆசிரியர்) நமக்கு கல்வி புகட்டுகிறார்... குரு நம்மை மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தி, உயிர்ப்புடன் வாழ வழிவகை செய்கின்றார். ஆச்சார்யா(ஆசிரியர்) நமக்கு தகவல் பரிமாற்றம் செய்கிறார்... குரு நமக்கு விழிப்புணர்வுடன் கூடிய புத்திசாலிதனத்தை புகட்டுகிறார்.

மனதிற்கும் நிலவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முழு நிலவு முழுமையை குறிக்கும்... பரிபூரணத்தை குறிக்கும், மிக உயரிய குணத்தை குறிக்கும். குரு பூர்ணிமா நாளில் ஒரு பக்தன் தன் முழுமையான நன்றியுணர்வால் மலர்ந்து... அந்த நன்றியுணர்வை வெளிபடுத்தும் நாள். அப்படி அந்த நன்றியுணர்வு வெளிப்படும்போது அந்த பக்தன் "பரந்து-விரிந்த-தன்னுள்-அசைந்தாடும்" ஒரு கடல் போல மாறிவிடுவர்... இத்தருணமே பரிபூரணதுவத்தை வெளிபடுத்தும் நேரம், குறைவில்லாத தன் மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் கொண்டாடக்கூடிய நேரம்.

இந்த நாளை வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்... வியாசர் எல்லாவிதமான விசயங்களின் ஞானத்தை நமக்கு வழங்கியுள்ளார். ஆகையால் குரு பூர்ணிமா நாளன்று எல்லா குருமார்களையும் (கடந்த கால குருமார்களை) நினைவுகூறும் நாள்.

ஒரு பக்தன் தன் பரிபூரணதுவத்தை வெளிப்படுத்தி, தான் அந்த வருடத்தில் எவ்வளவு முன்னேறி இருக்கிறேன், எவ்வளவு நல்ல மாற்றம் தன் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்று தன் ஒரு வருட வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் நாள். தன் வாழ்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள்... ஞானத்தில் வளரும் அல்லது வளர்ந்த நிலை... எவ்வளவு ஞானம் தான் பெற்றுள்ளேன் என்பதை ஆய்ந்து அறியும் நாள்.

நம் ஆன்மீக முன்னேற்றத்தை நம் மனதிற்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி வந்தால் தான்... நாம் நம் நிலையை உணர்ந்துகொள்ள முடியும்... ஆகையால் ஒவ்வொரு குரு பூர்ணிமா நாளன்றும் நாம் அனைவரும் நம்மை ஆய்வு செய்து, அந்த நினைவை நம் மனதிற்கு நினைவுட்டுவது மிக அவசியம்.

No comments:

Post a Comment