Wednesday, January 21, 2009

வாய்மை - நல்ல உணர்வுகளின், நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு...

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்" - திருக்குறள்

உடலினது தூய்மை நீரினால் அமையும்... உள்ளத்தினுடைய தூய்மை வாய்மை என்னும் நற்பண்பினால் அமையும்...

வாய்மை என்பது வெறும் செயல் மட்டுமல்ல... நல்ல உணர்வுகளின், நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு... உணர்வுகளும், எண்ணங்களும் நமது உள்ளத்திலிருந்து தான் வெளிப்படுகின்றது... உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால், அதன் பிரதிபலிப்பு நமது உணர்வுகளிலும், எண்ணங்களிலும் காண முடியும்...

உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு மிகச்சிறந்த வழி தான் 'தியானம்'... தியானத்தின் மூலம் வாய்மை எனும் நல்ல பண்பினை அடைய முடியும்.

No comments:

Post a Comment