Wednesday, January 14, 2009

சென்ற வார சத்சங்கத்தில்...

சென்ற வார சத்சங்கத்தில் குருஜியிடம் சிலர் கேள்வி கேட்டனர்... குருஜியின் பதில்களில் சிலவற்றின் தமிழாக்கம்...


(இந்த வாரம் ஆசிரியர் பயிற்சி நிறைவு பெற்றதால் ஆசிரியர் சம்பந்தமான கேள்வி ஒன்றை ஒருவர் கேட்டார்)


கேள்வி : ஒரு நல்ல வாழும் கலை ஆசிரியரின் அடையாளங்கள் என்ன...?
குருஜியின் பதில் : ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்கள்.... (Humility) பணிவு, (Integrity) முழுமை/நேர்மை/வாய்மை, (Compassion)அரவணைக்கும் தன்மை... இம்மூன்று குணங்கள் இருத்தல் அவசியம்


இந்த குணங்கள் ஆசிரியருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு மனிதனிடமும் இருத்தல் அவசியம்... இந்த குணங்கள் எல்ல மனிதர்களிடம் மறைந்துள்ள இயல்பான குணங்கள்... அதை அனைவருக்கும் உணரவைத்தல் அவசியம்... இப்பொழுதுள்ள காலகட்டத்தில் நாம் இதை ஒரு சவாலாக ஏற்று அனைத்து மக்களிடமும் உணர்த்த நாம் பாடுபட வேண்டும்.


கேள்வி : குருஜி, ஆன்மீகத்திற்கும்... செழிப்பான வாழ்வு... இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது..? (I am in crossroads between Spirituality and Prosperity)
குருஜியின் பதில் : ஆன்மீகம் செழிப்பான வாழ்விற்கு எதிரானது அல்ல... அதேபோல் செழிப்பான வாழ்வு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல... ஆன்மீக உணர்வு இல்லாத செழிப்பான வாழ்வு நம்மை தாழ்வு நிலைக்கு தள்ளிவிடும்...


பல மனிதர்கள், நிறுவனங்கள் நன்னெறிகள் இல்லாமல் செழிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கியவர்கள் தாழ்வு நிலையை அடைந்ததை கண்கூடாக நாம் கண்டுள்ளோம்... ஆக ஆன்மீகம் கலந்த செழிப்பான வாழ்வு மேன்மையுடையது. செழிப்பு என்பது பொன் பொருள் மட்டுமல்ல... நன்னெறிகளும் தான்...

No comments:

Post a Comment