Wednesday, December 17, 2008

வாழும் கலையா... அப்படின்னா என்னங்க...?

அளவில்லா அன்பரே,

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள ஒற்றுமை... நாம் அனைவரும் அன்புடன் இருக்கதெரிந்தவர்கள், சிந்திக்க தெரிந்தவர்கள், அனைத்து ஜீவராசிகளையும் அரவணைக்க தெரிந்தவர்கள்... இப்படி பல அற்புதமான தன்மைகளை கொண்ட மனிதனாக பிறந்ததற்கு முதலில் பெருமை கொள்வோம்.

நாம் எந்த நாட்டை சார்ந்தவரனாலும், எந்த மதத்தை சார்ந்தவரனாலும், எந்த நிறத்தை சார்ந்தவரனாலும், எந்த ஜாதியை சார்ந்தவரனாலும், ஆத்திகரனாலும், நாத்திகரனாலும் இந்த அற்புதமான குணங்கள் நம்மிடமே உள்ளதென்பது எல்லாரும் அறிந்த உண்மை.

இப்படி இருந்தும் இன்றைய உலகில் மதம், நிறம், ஜாதி, குழுக்கள், அரசியல் ஆகிய பெயர்களால் பலவிதமான கலவரங்கள் உருவாகிரதென்பது நாம் அறிந்த ஒன்று. நாம் வாழக்கூடிய இன்றைய காலங்களிலேயே இப்படி என்றால்... நம்முடைய வருங்கால சந்ததியினரின் காலங்களை நினைத்துபாருங்கள்...

இப்படிப்பட்ட கலவரங்கள் வராமல் தடுக்க என்ன வழி...?

இத்தகைய கலவரங்களை வராமல் பாதுகாக்க மிகச்சிறந்த வழி ஒன்று உண்டு தெரியுமா... அதுதான் "ஆன்மீகம்" - அல்லது - "மனிதனை பண்படுத்தகூடிய வாழ்கை கல்வி".

பலர் மதமும் ஆன்மீகமும் ஒன்று என நினைப்பார்கள், ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. "மதம்" என்பது வாழைபழதோல், "ஆன்மீகம்" என்பது வாழைச்சுளை. எல்ல மதத்திலும் ஆன்மீகம் உண்டு, அதை விட்டுவிட்டு நாம் சடங்குகள் சம்பிரதாயங்களில் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இதனால் ஆன்மீகம் தரும் கல்விதனை இழந்து இருக்கிறோம். இன்றைக்கு, தனி மனித பிரச்சனைகளில் தோன்றி... குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முதல் உலகப்பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் ஒரே தீர்வை தருவது ஆன்மீக கல்வி மட்டுமே.

இதற்காக தனித்தன்மையுடன் வடிவமைத்திருக்க கூடிய பயிற்சி தான் வாழும் கலை. மனிதனின் ஒவ்வொரு நிலைகளையும் (உடல், மூச்சு, மனம், புத்தி, நினைவாற்றல்) இப்பயிற்சி மூலம் தூய்மைபடுத்தி, ஆன்மீக நெறிகளை வாழ்வில் கடைபிடிக்க மிக எளிமையான முறையில் வடிவமைக்கபட்டுள்ளது.

இப்பயிற்சியின் நோக்கமே தனி மனிதனை திடப்படுத்துவது, தனி மனிதனை திடப்படுத்துவத்தின் மூலம் சமூதாயத்தை திடப்படுத்துவது, சமுதாயத்தை திடப்படுத்துவத்தின் மூலம் ஒரு மிகச்சிறந்த தெய்வீகமான உலகத்தை உருவாக்குவதே இப்பயிற்சியின் சிறப்பம்சமாகும்.
மனிதனை மனிதனாக வாழவைப்பது வருமானக்கல்வி மட்டுமல்ல வாழ்கை கல்வியும்தான். இந்த அற்புதமான வாழ்கை கல்வியை அனைவரும் கற்றிட அன்புடன் அழைக்கிறோம்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

2 comments:

  1. jgd.exellent.good begining made.keep your good work great.with loves.K.L.JAGS.

    ReplyDelete
  2. Jai Guru Dev,

    It was a pleasant surprise for me when I see a blog like this in Tamil.

    Please keep posting more articles and your insights in this blog.

    Thanks a lot.

    Pothi.

    ReplyDelete