Showing posts with label Question and Answers with Guruji. Show all posts
Showing posts with label Question and Answers with Guruji. Show all posts

Monday, December 20, 2010

கேள்வி: நீங்கள் மனதை பற்றி கூறும் பொழுது... மனம், சக்திவடிவானது - உடலையும்தாண்டி செல்லக்கூடியது என்று கூறினீர்கள்... விஞ்ஞான ரீதியாக பார்க்கும்பொழுது சக்திகளின் இணக்கம் ஆக்கபூர்வமாகவோ... அழிவுப்பூர்வமாகவோ இருக்கும். இப்படி இருக்கும்போது ஒருவருடைய மனது எப்படி அடுத்தவரின் மனதை பாதிக்கும் அல்லது... அடுத்தவரின் மனதில் பாதிப்பை உண்டாக்கும்...?

குருஜி-யின் பதில்: ஒருவருடைய மனதின் சக்தி கண்டிப்பாக அடுத்தவரிடம் ஒருவிதமான தாக்கத்தை உண்டாக்கும்... நம்முடைய உணர்வுகள் நம் எண்ணத்தைவிட வலிமையானது... இதை நாம் கண்கூடாக சிறு குழந்தைகளிடம் காணலாம்... சிறுவர்களில் ஒரு குழந்தை அழதுவங்கினால் மற்ற குழந்தைகளும் அழ ஆரம்பித்துவிடும்... அதைப்போல ஒரு குழந்தை விஷமம் செய்ய ஆரம்பித்தால் மற்ற குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடும்... இந்த அனுபவங்களை அந்தக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு மிக நன்றாக புரியும்.

இதைப்போலவே, ஒருவரை நோக்கி ஒருவர் காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொண்ட இடத்தில்... அல்லது ஒருவரை ஒருவர் திட்டிகொண்ட இடத்தில... அல்லது கோபமாக சண்டை போட்டு கொண்ட இடத்தில்... மற்ற நபர்கள் வந்தால் அந்த உணர்வுகளை அவர்கள் எளிதாக உணரமுடியும்... எந்த ஒரு காரணமும் இல்லாமல் முன்பு இருந்தவர்களின் உணர்வின் தாக்கத்தை இவர்களிடம் காண முடியும்... எந்த ஒரு காரணமும் இல்லாமல் கோபம்... அமைதியின்மை... மன அழுத்தம்... தொற்றிக்கொள்ளும்...!!!

ஆக உயர்வான உணர்வுகளுடன் ஒன்றிணைத்து இருக்கும் பொழுது... அந்த உயர்வான உணர்வுகள் மற்றவரிடமும் பரவி அவரையும் பற்றிக்கொள்ளும், ஆனால்... பார்க்கும்பொழுது நம்முடைய கோபமானது உயர்வான உணர்வைவிட வேகமாக மற்றவரிடம் பரவி... அவரையும் எளிதில் பற்றிக்கொள்ளும்...!!!

Friday, December 17, 2010

கேள்வி : தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது... மிகவும் அருமையாக இருக்கிறது, ஆனால் அன்றாட வாழ்கையில் பல காரியங்களில் இடுபட வேண்டியுள்ளது... அன்றாட வாழ்கையை கோபமில்லாமலும்... பரபரப்பு இல்லாமலும் அமைதியான மனதோடு இயல்பாக வாழ்வது எப்படி?

குருஜி-யின் பதில்: நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள தினமும் காலையில் குளிக்கின்றோம்... அதன் பின் நம் அன்றாட காரியங்களை கவனிக்கின்றோம்... காலை முதல் குளித்துக்கொண்டே இருப்பது என்ற அவசியம் இல்லை... அதுபோல தியானம் செய்து மனம் அமைதியடைந்தபின் அன்றாட காரியங்களை கவனிக்கலாம். மனதை தொந்தரவு இல்லாமல் வைத்துக்கொள்வதென்பது சுலபமான காரியமில்லை... தொடர்ந்து தினமும் சில மணிநேரம் பயிற்சி மேற்கொண்டால்... எளிமையாக மன அமைதி பெறலாம்.

கேள்வி : ஓம் என்பதன் அர்த்தம் என்ன?

குருஜி-யின் பதில்: படைப்பின் ஒரு அற்புதமான ஒலி "ஓம்"... இதை காலத்தின் ஒலி என்று குறிப்பிடலாம்... காலம் தோன்றும் போதே இந்த ஒலியும் இருந்திருக்கின்றது. இந்த ஒலி "ஆ..." "ஊ..." "ம்..." ஆகிய சப்தங்களை உள்ளடக்கியது...

ஒரு மலை உச்சியில் சென்று அங்கு ஏற்படும் சப்தத்தை உன்னிப்பாக கவனித்தால் "ஓம்" என்ற ஒலி-யை கேட்கமுடியும்... அதே போல கடல் அலைகளால் ஏற்படும் சப்தத்தை கேட்டாலும் "ஓம்" என்ற ஒலி ஏற்படுவதை கேட்க முடியும்.

ஓம் என்ற ஒலி-யை உச்சரிப்பது மூன்று நிலை பிரணாயாமா செய்வதற்கு ஒப்பாகும்...
"ஆ..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் வயிற்று பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்... "ஊ..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் மார்பு பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்...
"ம்..." என்னும் சப்தம் நாம் ஏற்படுத்தும்போது நம் உடம்பின் மேல் பகுதியில் நல்ல புத்துணர்வை ஏற்படுத்துவதை உணரலாம்.

Thursday, December 16, 2010

கேள்வி: உண்மையான பக்தனாக மாறுவது எப்படி...?

குருஜி-யின் பதில்: "நான் ஒரு உண்மையான பக்தன்" என்று முதலில் நினைத்துகொள்ள வேண்டும். "நான் பக்தர்களில் முதன்மையானவன், என்னை போல் யாரும் இல்லை" என்ற உணர்வு வேண்டும். இன்னார் முதன்மையானவர்... எனக்கு இரண்டாமிடம் தான்... என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொருவரும் "நான் தான் பக்தர்களில் முதன்மையானவன்... என்னை போல் பக்தியில் சிறந்தவன் யாரும் இல்லை" என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருத்தல் அவசியம்...

நான் இரண்டாமிடத்தில் உள்ளேன், மூன்றாம் இடத்தில உள்ளேன்... பத்தாம் இடத்தில உள்ளேன் என்று நினைத்தால்... நீங்கள் நினைக்கின்ற அளவு ஞானத்தில் இருந்து விலகி இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்... இந்த பிரச்சனை பலருக்கும் உள்ளது... முதலில் வாழும் கலை அடிப்படை பயிற்சியை முடித்தபின் சில நாட்கள் கடை பிடித்து... பின் விட்டுவிடுவீர்கள்... மீண்டும் தொடர நினைக்கும்போது மிகவும் சிரமமாக இருக்கும். ஒரு முதுநிலை பயிற்சியில் கலந்துகொண்ட பின், மீண்டும் நம்மை இந்த ஞான பாதையில் இப்பயிற்சி அழைதுவருவதை உணர்வீர்கள்.

கேள்வி: பெண்களை பார்த்தால் என்னுள் காம உணர்வுகள் அதிகரிக்கின்றன... புனிதமான இடங்களில் கூட, தங்களின் முன்னிலையிலும் கூட... இதிலிருந்து விடுபடுவது எப்படி?

குருஜி-யின் பதில்: அது தானாக மறைந்துவிடும். உங்களுக்கு போதுமான வேலை இல்லாத பொழுது இம்மாதிரியான எண்ணங்களில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பதிவுகளின் காரணத்தினாலும்... அல்லது முற்ப்பிறவியில் ஏற்பட்ட பதிவுகளின் காரணத்தினாலும் இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு தீ பிடித்து எரியும் வீட்டிற்க்குள் நீங்கள் சிக்கி விட்டீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்... அப்பொழுது... நீங்கள் தப்பிப்பதற்கு முயல்வீர்களா... இல்லை நீங்கள் விரும்பும் பெண்ணை நினைத்துபார்த்து ரசித்துக்கொண்டிருப்பீர்களா...? உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையாலும்... உள்ளே இருந்தால் பாதிப்பு உண்டாகும் என்ற பயத்தினால் தப்பிபதற்கு முயல்வீர்கள்... ஆக பயமும், ஆசையும் ஒரு வகையில் நல்லதே... பயத்தையும், ஆசையையும் புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தி நம்மிடம் உள்ள தீய பழக்கங்களில் இருந்து விடுபடவேண்டும்...

உதாரணமாக உங்களுக்கு மது பழக்கம் அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதென்றால்... இவற்றை உபயோகித்தால் பெரிய இழப்பு (பண வகையிலோ, குண வகையிலோ, ஆரோக்ய வகையிலோ) நேரிடும் என உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளலாம்.

பயமும் மிக முக்கியமானது... பயம் இல்லாவிட்டால் மக்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் எதைவேண்டுமானாலும் செய்ய துவங்கிவிடுவார்கள்... போக்குவரத்து சாலையில் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் செல்ல துவங்கிவிடுவார்கள்... ஒரு ஒழுக்க கட்டுபாட்டை கடைபிடிக்க பயம் அவசியம்.

Wednesday, December 15, 2010

கேள்வி: எல்லாமே மாறிக்கொண்டு இருக்கிறதென்றால், தன் நிலை மாறாமல்... நிலையாக இருப்பவை... எவை... என்ன?

குருஜி-யின் பதில்: "எல்லாமே நிலையற்றவை"... இது தான் நாம் உணர்ந்த உண்மை... நிலையற்றவைகளை கண்டுகொள்வது மிக எளிமையானது. இந்த உண்மை மிகதெளிவாக புரியும்போது, மற்றொன்றையும் புரிவது அவசியம்... இந்த நிலையற்றவைகளை நடுநிலையாய் சுட்டி காட்ட ஒரு ஆதாரம் தேவை. ஒரு நடுநிலையான மாறாத ஆதாரம் இருந்தால் மட்டுமே மாறிகொண்டிருப்பவைகளை கண்டுணர முடியும். எல்லாமே மாறிகொண்டிருக்கிறது என்றால் அதை உணர்வதற்கு மாறாத ஒன்றின் உதவி இல்லாமல் அதை உணர முடியாது. எல்லாமே மாறுகின்றது என்பதை உணரும்போது, அப்படியே நம்முள் உள்நோக்கி பயணித்து பார்த்தோமேயானால் ஏதோ ஒன்று மிகவும் வேறுபட்டு... தனித்தன்மையாய்... அழகாய் மாறாமல் இருப்பது புரியும்... இது ஒரு மறைமுகமும் இல்லாத நேர்முகமும் இல்லாத ஒரு வித்யாசமான அனுபவம்... இதை தான் அத்வைத தத்துவத்தை உலகிற்கு வழங்கிய ஆதி சங்கரர் "அப்ரகோஷ-அநுபூதி" என்று குறிபிட்டுள்ளார். "ப்ரகோஷ" என்றால் "நேரடியான" (direct), "அநுபூதி" என்றால் "மறைமுகமான" (Indirect)... இந்த அனுபவம் நேரடியாகவும்... மறைமுகமாகவும்... அனுபவிக்க முடியாத ஒன்று...!!! இந்த ஷூட்சுமத்தை தவிர்க்கவோ.... தக்கவைத்துகொள்ளவோ... முடியாது...!!! இந்த அனுபவத்தை யாராலும் தவிர்க்கவும் முடியாது, தக்கவைத்துகொள்ளவும் முடியாது... இதுவே உண்மையான நுண்மையான புதிர், இது தான் நம் வாழ்க்கை.

வாழ்கையில் "நான் தூங்கியதே இல்லை" அல்லது "இது தான் தூக்கம்" என்று ஒருவராலும் சொல்ல இயலாது... இது நமக்கு நாமே தெரியாமல் அனுபவித்துகொண்டிருக்கும் அனுபவத்தின் ஒரு பகுதி. நம்மை... தூங்க வைக்கும்... தூக்கத்தில் இருக்கும்... தூக்கத்தில் இருந்து எழவைக்க கூடிய ஒன்று தான் நம்முடைய "மெய்/சுயம்/ஆன்மா" (Self). இது இன்னும் ஒரு பெரிய புதிர்... இது இல்லாமல் நாம் இருப்பது சாத்தியமற்றது. இது இல்லாமல் இருக்க கூடியது... ஆனால் உணரவோ... தெரிந்து கொள்ள முடியாத ஒன்று...

தூய ஞானத்தின் வாயிலாகவும்... அருளின் மூலமாகவும் அறிய முடியும்... இதை "மெய் ஞானம்" என்றழைப்பர் (Self Knowlege).

கேள்வி: இன்றைய இளைய சமூதாயத்தினர் (தங்கள் ஐய்ம்புலன்களால்) பல வழிகளில் ஈர்க்கப்படுகின்றனர், அவர்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட வாழும் கலையில் ஏதாவது உள்ளதா?

குருஜி-யின் பதில்: தலைமை ஏற்கக்கூடிய பண்பு, நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்ககூடிய வழிமுறைகள் உள்ளடங்கிய ஆர்ட் எக்ஸ்செல் (ART EXCEL), மற்றும் YES , YES +, பயிற்சிகள் அவர்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட உதவும்.

இளைய சமூதாயத்தினர் பல வழிகளில் ஈர்க்கப்படுவதற்கான காரணம் அதில் கிட்டும் அற்ப சந்தோசத்திற்காக மட்டும் தான்...!!!

கேள்வி: நல்ல ஆசைகளையும், நல்லவை இல்லாத ஆசைகளையும் வேறுபடுத்தி பார்ப்பது எப்படி?

குருஜி-யின் பதில்: நீண்ட கால சந்தோசத்தை தந்து குறுகிய கால பிரச்சனைகள் தரக்குடியவை நல்லது.... நீண்ட கால பிரச்சனைகள் தந்து குறுகிய கால சந்தோசத்தை தரக்குடியவை தவிர்க்க வேண்டியது. இதயே வரைமுறையாக கடைபிடிப்பது நன்று.

கேள்வி: குருவானவர் எப்படி மனிதனை அவனின் இயல்பு நிலைக்கு மாற்றுகிறார்?

குருஜி-யின் பதில்: அவர் எந்த வித மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை... மனிதனின் இயல்பு நிலைக்கு அழைத்து வருகிறார்.